<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tamilnadu education | SURABOOKS.COM</title>
	<atom:link href="https://blog.surabooks.com/tag/tamilnadu-education/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://blog.surabooks.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 27 May 2017 08:58:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.1.8</generator>

<image>
	<url>https://blog.surabooks.com/wp-content/uploads/2017/01/cropped-logo-1-32x32.png</url>
	<title>tamilnadu education | SURABOOKS.COM</title>
	<link>https://blog.surabooks.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம்﻿ அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்﻿</title>
		<link>https://blog.surabooks.com/plus-2-students-will-be-able-to-write-their-exams-this-year/</link>
		
		<dc:creator><![CDATA[surabooksadmin]]></dc:creator>
		<pubDate>Sat, 27 May 2017 08:58:28 +0000</pubDate>
				<category><![CDATA[Education News]]></category>
		<category><![CDATA[+1 exam]]></category>
		<category><![CDATA[+2 exam]]></category>
		<category><![CDATA[tamilnadu education]]></category>
		<guid isPermaLink="false">http://blog.surabooks.com/?p=3672</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம் &#124; இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி விளக்கம் அளித்தார். வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-18) பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு முறையின்படி, மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒவ்வொரு [&#8230;]</p>
The post <a href="https://blog.surabooks.com/plus-2-students-will-be-able-to-write-their-exams-this-year/">இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம்﻿ அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்﻿</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம் | இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி விளக்கம் அளித்தார்.</p>
<p>வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-18) பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு முறையின்படி, மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் <strong>200-ல் இருந்து 100 ஆக</strong> குறைக்கப்படுகிறது. அதன்படி, ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து<strong> 600 ஆக</strong> குறைந்துவிடும்.</p>
<p>பிளஸ் 1 பொதுத்தேர்வு, அதைத் தொடர்ந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆகியவை 600 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த இரு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்களும் பிளஸ் 2 இறுதி தேர்வுக்குப் பிறகு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு அமைந்திருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் <strong>தண்.வசுந்தராதேவி</strong> கூறியதாவது: இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு பிளஸ் 1 சேர்ந்துவிட்டு அடுத்த ஆண்டு பிளஸ் 2 செல்ல இருக்கிற மாணவர்களுக்குத்தான் புதிய தேர்வுமுறையின்படி 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். அவர்களுக்கு பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் (ஒவ்வொன்றுக்கும் தலா 600 மதிப்பெண்) ஆகியவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு வசுந்தராதேவி கூறினார்.</p>The post <a href="https://blog.surabooks.com/plus-2-students-will-be-able-to-write-their-exams-this-year/">இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம்﻿ அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம்﻿</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
