<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>articles | SURABOOKS.COM</title>
	<atom:link href="https://blog.surabooks.com/tag/articles/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://blog.surabooks.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 25 Jun 2021 13:04:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.1.8</generator>

<image>
	<url>https://blog.surabooks.com/wp-content/uploads/2017/01/cropped-logo-1-32x32.png</url>
	<title>articles | SURABOOKS.COM</title>
	<link>https://blog.surabooks.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்</title>
		<link>https://blog.surabooks.com/the-israeli-palestinian-conflict/</link>
		
		<dc:creator><![CDATA[surabooksadmin]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jun 2021 13:04:00 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Current Affairs]]></category>
		<category><![CDATA[articles]]></category>
		<category><![CDATA[current affairs]]></category>
		<category><![CDATA[Israeli]]></category>
		<category><![CDATA[Palestinian]]></category>
		<category><![CDATA[surabooks]]></category>
		<guid isPermaLink="false">https://blog.surabooks.com/?p=5754</guid>

					<description><![CDATA[<p>இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழும் காஸாவில் தரைமட்டமாயின. இதில் 65 குழந்தைகள் உள்பட 230-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் படையினர் வீசிய ராக்கெட் வெடிகுண்டுகளால் இரண்டு குழந்தைகள் உள்பட 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் சௌம்யா சந்தோஷ் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானார். 2014-இல் இஸ்ரேல் ஹமாஸ் இடையே [&#8230;]</p>
The post <a href="https://blog.surabooks.com/the-israeli-palestinian-conflict/">இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது.</p>



<p>இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழும் காஸாவில் தரைமட்டமாயின. இதில் 65 குழந்தைகள் உள்பட 230-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.</p>



<p>ஹமாஸ் படையினர் வீசிய ராக்கெட் வெடிகுண்டுகளால் இரண்டு குழந்தைகள் உள்பட 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் சௌம்யா சந்தோஷ் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><a href="https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/The-Israeli-Palestinian-conflict.jpg"><img decoding="async" src="https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/The-Israeli-Palestinian-conflict.jpg" alt="" class="wp-image-5755" width="450" height="216" srcset="https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/The-Israeli-Palestinian-conflict.jpg 600w, https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/The-Israeli-Palestinian-conflict-300x144.jpg 300w" sizes="(max-width: 450px) 100vw, 450px" /></a></figure></div>



<p>2014-இல் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 50 நாள்கள் நடைபெற்ற கடும் சண்டைக்கு பிறகு நடைபெற்ற மோசமான சண்டை இதுவாகும்.</p>



<p><strong>மோதலின் மூலக்காரணம்:</strong> கிழக்கு ஜெருசலேம், ஷேக் ஜாரா மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பாலஸ்தீனர்களின் இடங்களை யூதர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளைக் கண்டித்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வந்ததால் இஸ்ரேலிய ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.</p>



<p>இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் பழைய நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்லாமியர்கள் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ரப்பர் வெடிகுண்டு துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயமடைந்தனர். இது மோதலை மேலும் அதிகரித்தது. அல்-அக்ஸா மசூதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேற ஹமாஸ் படையினர் கெடு விதித்தனர். இஸ்ரேலின் பல பகுதிகளில் யூதர்களுக்கும், பாலஸ்தீன அரபிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.</p>



<p>காஸா பகுதியிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலம் மீது மே 10-ஆம் தேதி ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியது ஹமாஸ். இதை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் நவீன ரக ஏவுகணைகளை காஸா பகுதியில் வீசி தாக்குதல் நடத்தியது.</p>



<p>ஹமாஸ் உள்பட பிற கிளர்ச்சிக் குழுவினர் நீண்ட தூரம் செல்லும் 4,4360 ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானவற்றை இடைமறி ஏவுகணையான ’அயர்ன் டோம் நடுவானில் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. எனினும், சில ராக்கெட் வெடிகுண்டுகள் சுமார் 90 கி.மீ. தூரம் உள்ள டெல் அவிவ், ஜபா, லாட் ஆகிய நகரங்களில் விழுந்து கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தியது.</p>



<p>உலகிலேயே அதிநவீன போர்த் தளவாடங்களையும், ரேடார் சாதனங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல், காஸா பகுதியை சாட்டிலைட் மூலம் துல்லியமாக கண்காணித்தது.</p>



<p>ஹமாஸ் படையினர் ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவுவதாக சந்தேகிக்கப்படும் மீது எச்சரிக்கை வெடிகுண்டுகளை இஸ்ரேல் வீசியது. இந்த வகை குண்டு வந்து விழுந்ததும் அடுத்த 5 நிமிடங்களில் அங்குள்ள மக்கள் வெளியேறிவிட வேண்டும். பின்னர், அந்த இடத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும்.</p>



<p>காஸா பகுதியில் செயல்பட்டு வந்த ஏஜென்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ்(ஏஎப்பி), அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்த 13 மாடி கட்டடத்தின் மீது ஹமாஸ் பிரிவு தலைவர்கள் இருப்பதாகக் கருதி எச்சரிக்கை குண்டையும், பின்னர் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியது. பத்திரிகையாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.</p>



<p>இதேபோல், ஹமாஸ் படையினர் வீசும் ராக்கெட் வெடிகுண்டு இடைமறி ஏவுகணையிடம் தப்பி இலக்கைத் தாக்குவதற்கு முன்பு எச்சரிக்கை மணியை இஸ்ரேலின் ராணுவ தொழில்நுட்பம் எழுப்பியதன் மூலம் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தப்பினர்.</p>



<p>தலைவர்கள் பலி: ஹமாஸ் படையினரின் அரசியல் பிரிவுத் தலைவர் கலில் அல் ஹயேவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. காஸா நகரச் சாலைகளுக்கு அடியில் சுரங்கப் பாதைகளை அமைத்து ராணுவத் தளவாடங்களை அதன் வழியாக கொண்டு சென்று ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் கண்டுபிடித்தது.</p>



<p>வான்வழி தாக்குதல் மூலம் அந்தச் சாலைகளில் குண்டுகளை வீசி சுரங்கப் பாதைகளையும், பதுங்கு குழிகளையும் இஸ்ரேல் அழித்தது. இதில் ஹமாஸ் படையினரின் 30 கமாண்டர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் முக்கிய ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்தனர்.</p>



<p>இஸ்ரேல்-காஸா சண்டை மோதலுடன் முடிவடைந்து விடவில்லை. அருகருகே வாழ்விடங்களைக் கொண்ட பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே மீண்டும் சிறு மோதல் ஏற்பட்டாலும், அது ஆயுதப் போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். இதைத் தடுக்க ஐ.நா. சபை சர்வதேச நாடுகள் ஒத்துழைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நில ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் எல்லைக்கோடு வரைவை இறுதி செய்யாதவரை ஆயுதச் சண்டைகள் முடிவுக்கு வராது.</p>



<p>இஸ்ரேல், காஸாவில் நடைபெற்று வரும் மனிதஉரிமை மீறல்களை சர்வதேச மனிதஉரிமை விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனிதஉரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.</p>



<p>ஐ.நா. மனிதஉரிமை கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் இஸ்லாமிய உறுப்பு நாடுகள் சார்பில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பை இந்தியா உள்பட 13 உறுப்பு நாடுகள் புறக்கணித்தன. சீனா, ரஷ்யா, உள்பட 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>



<p>இதுகுறித்து ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p>



<p>கிழக்கு ஜெருசேலம் உள்பட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகள் மற்றும் இஸ்ரேலில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>



<p>அதன்மூலம், இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற சண்டையின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த நிரந்தர சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>The post <a href="https://blog.surabooks.com/the-israeli-palestinian-conflict/">இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜி-7 உச்சி மாநாடு &#8211; G7 Summit</title>
		<link>https://blog.surabooks.com/g7-summit-cornwall-united-kingdom-2021/</link>
		
		<dc:creator><![CDATA[surabooksadmin]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jun 2021 10:28:23 +0000</pubDate>
				<category><![CDATA[Current Affairs]]></category>
		<category><![CDATA[articles]]></category>
		<category><![CDATA[current affairs]]></category>
		<category><![CDATA[G7 Summit]]></category>
		<category><![CDATA[surabooks]]></category>
		<guid isPermaLink="false">https://blog.surabooks.com/?p=5734</guid>

					<description><![CDATA[<p>பிரிட்டன் தலைநகர் லண்டனில் 47-ஆவது ஜி-7 உச்சி மாநாடு ஜூன் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடந்தது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஜி7 வரலாறு 1970-களின் முற்பகுதியில் எண்ணெய் வர்த்தகத்தால் உலகப் பொருளாதாரத்தில் [&#8230;]</p>
The post <a href="https://blog.surabooks.com/g7-summit-cornwall-united-kingdom-2021/">ஜி-7 உச்சி மாநாடு – G7 Summit</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<div class="wp-block-image is-style-rounded"><figure class="aligncenter size-large is-resized"><a href="https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/g7-summit.jpg"><img decoding="async" loading="lazy" src="https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/g7-summit.jpg" alt="" class="wp-image-5737" width="732" height="412" srcset="https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/g7-summit.jpg 976w, https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/g7-summit-300x169.jpg 300w, https://blog.surabooks.com/wp-content/uploads/2021/06/g7-summit-768x432.jpg 768w" sizes="(max-width: 732px) 100vw, 732px" /></a></figure></div>



<pre id="tw-target-text" class="wp-block-preformatted">பிரிட்டன் தலைநகர் லண்டனில் 47-ஆவது ஜி-7 உச்சி மாநாடு ஜூன் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடந்தது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

<strong>ஜி7 வரலாறு</strong>
1970-களின் முற்பகுதியில் எண்ணெய் வர்த்தகத்தால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உலகில் பொருளாதாரத்தில் முன்னணியிலுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் 1975-இல் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துச் சந்தித்துக்கொண்டன. அடுத்த ஆண்டு கனடா சேர்க்கப்பட்டதும் தான் இந்தக் குழு ’ஜி7 டிக 7) ஆனது. 1998-இல் ரஷ்யாவும் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் ஜி8 ஆனது. 2014-இல் க்ரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதை அடுத்துக் குழுவிலிருந்து அந்நாடு நீக்கப்பட்டு மறுபடியும் அந்தக் குழு ஜி7 ஆனது.
உலகின் மிகப் பெரிய 7 நாடுகள் பொருளாதார ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் சந்தித்துக்கொண்டு உலகின் போக்கை மாற்றும் விதத்திலான முடிவுகளை எடுப்பதுதான் ஜி7 மாநாட்டைக் கவனிக்க வைக்கிறது. ஜி7 மாநாடு ஆண்டுதோறும் இந்தக் குழுவின் உறுப்பு நாடுகளுள் ஒன்றில் நடக்கும். அந்த நாட்டின் பிரதமரோ அதிபரோ அந்த ஆண்டு மாநாட்டின் தலைமைப் பொறுப்பை வகிப்பார். இந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற்றதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை வகித்தார்.

<strong>ஜி7 அமைப்பின் மீது விமர்சனம்</strong>
ஜி7 அமைப்பின் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட சீனாவும் இந்தியாவும் இந்தக் குழுவில் சேர்க்கப்படாதது பிரதானக் குற்றச்சாட்டு. இந்தியா, சீனாவின் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் தனிநபர் வருமானம் குறைவாக இருந்த ரஷ்யா ஏன் சேர்க்கப்பட்டது என்பதில் தெளிவு இல்லை. இந்தக் குழு வெகு காலமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்ததும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. உலகையே மாற்றியமைக்கக்கூடிய முடிவுகளை வெறும் ஏழு நாடுகளின் தலைவர்கள் ஓர் அறைக்குள் எடுக்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஜி7 மாநாட்டுக்கு முன்பாக அந்த மாநாட்டின் செயல்திட்டம் குறித்து அறிக்கை வெளியிடும் வழக்கம் தொடங்கியது.
<strong>
ஜி7 கருப்பொருள்களும் கவனமும்</strong>
ஆரம்பத்தில், ஜி7 மாநாடுகள் பொருளாதாரத்தை மையம் கொண்டே நடைபெற்றன. போகப்போக ஜி7 அந்தந்தக் காலத்தின் பிரச்சினை, சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப வேறு சில கருப்பொருள்களையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தது. இப்படிச் சேர்ந்தவைதான் வெளியுறவு, பாதுகாப்பு, வளர்ச்சி, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் போன்றவை. ஒவ்வொரு ஜி7 மாநாட்டின் முடிவின்போதும் ஓர் அறிக்கை(உடிஅஅரேளைூரந) வெளியிடப்படும். ஜி7 மாநாடுகள் சமீப ஆண்டுகளாக சுகாதாரம், பருவநிலை மாற்றம் போன்ற உலகைப் பாதிக்கும் பிரச்சினைகளின் மேல் கவனம் செலுத்திவருகின்றன. 2002 ஜி7 மாநாட்டின்போது எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்றவற்றின் மீது போர் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவின் காரணமாக உருவாகிய ’குளோபல் ஃபண்டு என்ற அமைப்பு இதுவரை இந்திய மதிப்பில் ‘ 3.30 லட்சம் கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 3.80 கோடிப் பேரின் உயிரைக் காப்பாற்றியிருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.

<strong>பிரதமர் மோடி பேச்சு</strong>
இந்த மாநாட்டில் ’பில்டிங் பேக் டுகெதர் - ஓபன் சொசைட்டீஸ் அண்ட் எகனாமிக்ஸ் என்ற தலைப்பில் நடந்த அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் முதன்மை பேச்சாளராக பங்கேற்றார். அவர் பேசும்போது, இந்தியாவின் நாகரிக நெறிமுறைகளின் ஓர் அங்கம்தான் ஜனநாயகமும் சுதந்திரமும். ஆனால், தவறான தகவல் மற்றும் இணைய தாக்குதல் ஆகியவற்றுக்கு திறந்த சமூகங்கள் இலக்காகின்றன என்பது கவலை அளிப்பதாக உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இதையே கூறியுள்ளனர்" என்றார். அத்துடன் கொரோனா பரவல் தடுப்புப் பணிக்காக ஜி7 நாடுகள் உதவிக்கரம் நீட்டியதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

<strong>ஒரே பூமி… ஒரே ஆரோக்கியம்</strong>
பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் ’ஒரே பூமி… ஒரே ஆரோக்கியம் என்ற தலைப்பிலும் பேசினார்.

<strong>கூட்டறிக்கை</strong>
இந்த நிகழ்ச்சியின் செயல்திட்டம் கொரோனாவிலிருந்து மீள்வதை ஒட்டியிருந்தது. இது எதிர்காலப் பெருந்தொற்றுகளிலிருந்து நம் அனைவரையும் மீட்கக்கூடிய வலுவான உலக சுகாதார அமைப்பின் தேவையையும் உள்ளடக்கியிருந்தது. கூடவே, பருவநிலை மாற்றமும் வர்த்தகமும் முக்கியப் கருப்பொருள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பு ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஜூன் 4, 5, 2021 ஆகிய தேதிகளில் சந்தித்தனர். உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச வரியாக 15ரூ நிர்ணயிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள். வரிவிதிப்பில் கெடுபிடியாக இல்லாததாலும், குறைந்த வரிவிதிப்பைக் கொண்ட நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தஞ்சம் புகுவதாலும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரும் இழப்பு, இந்தியாவுக்கு மட்டும் இதனால் ஆண்டுக்கு ‘ 73,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் ஜி7 மாநாட்டின் முக்கியமான அறிவிப்பு இந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு 100 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி வழங்கும் என்பது. இதில் 50 கோடி டோஸ்களை அமெரிக்காவும், 10 கோடி டோஸ்களை பிரிட்டனும் வழங்கும். கூடவே, கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு ஏழை நாடுகளுக்கு நிதியுதவி செய்தல், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

<strong>பி3டபிள்யூ திட்டம்</strong>
பல்வேறு நாடுகளை சாலை மூலம் இணைப்பதற்காக, ’பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (பிஆர்ஐ) என்ற திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அதேநேரம் தனது பொருளாதார, அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்தவே சீனா இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது என சில நாடுகள் கூறி வருகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளுக்கு கடன் வழங்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் ஜி7 மாநாட்டில் சீனாவின் பிஆர்ஐ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க, ’பில்ட் பேக் பெட்டர் வேர்ல்டு (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அரசு ஜி7 மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பி3டபிள்யூ திட்டத்தில் இணைவது குறித்து விரிவாக பரிசீலிக்கும்" என்றது.</pre>



<p></p>The post <a href="https://blog.surabooks.com/g7-summit-cornwall-united-kingdom-2021/">ஜி-7 உச்சி மாநாடு – G7 Summit</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
