<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிளஸ் 2 பொதுத் தேர்வு | SURABOOKS.COM</title>
	<atom:link href="https://blog.surabooks.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://blog.surabooks.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 18 Feb 2016 10:55:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.1.8</generator>

<image>
	<url>https://blog.surabooks.com/wp-content/uploads/2017/01/cropped-logo-1-32x32.png</url>
	<title>பிளஸ் 2 பொதுத் தேர்வு | SURABOOKS.COM</title>
	<link>https://blog.surabooks.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்</title>
		<link>https://blog.surabooks.com/introduction-new-changes-in-common-exams-question-papers/</link>
		
		<dc:creator><![CDATA[surabooksadmin]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Nov 2015 09:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[SAMACHEER]]></category>
		<category><![CDATA[School Guides]]></category>
		<category><![CDATA[10ம் வகுப்பு பொதுத் தேர்வு]]></category>
		<category><![CDATA[பிளஸ் 2 பொதுத் தேர்வு]]></category>
		<guid isPermaLink="false">http://blog.surabooks.com/?p=1422</guid>

					<description><![CDATA[<p>பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த [&#8230;]</p>
The post <a href="https://blog.surabooks.com/introduction-new-changes-in-common-exams-question-papers/">பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.<br />
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.</p>
<p>இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், &#8216;புளூ பிரின்ட்&#8217;டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்து எழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும்.<br />
புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.<br />
எனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும்.</p>
<p>இந்த முறையில் தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும். அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும்.<br />
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏன் புரிந்து படிக்க வேணடும்?<br />
பல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமே கற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்ற<br />
அம்சங்களை விட்டு விடுகின்றனர்.</p>
<p>அதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்கு, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.<br />
எனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>&nbsp;</p>
<p><strong><a href="http://www.surabooks.com/Category/6527/school-guides/tamil-nadu-state-board">12th &amp; 10th Standard PTA Solution Guides  </a> </strong>&#8211; Surabooks.com</p>The post <a href="https://blog.surabooks.com/introduction-new-changes-in-common-exams-question-papers/">பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்</a> first appeared on <a href="https://blog.surabooks.com">SURABOOKS.COM</a>.]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
